பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

193


விழாக்களுக்கும் வெள்ளி விழாக்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கினார்கள். இவற்றுள், சென்னை சைவசித்தாந்த சமாசத்தின் மாநாடுகள், திருப்பாதிரிப் புலியூர்ச் சைவப் பெரியார் மாநாடு, தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்க வெள்ளி விழா, புதுவைக் கலைமகள் கழக விழா - கோவல் தமிழ்ச் சங்க ஆண்டு விழாக்கள் முதலியவை மிகவும் குறிப்பிடத் தக்கவை. புலியூரிலும் பிறவூர்களிலும் அடிகளாரின் தலைமையிலும் திருமுன்பும் சொற்பொழிவாற்றி அடிகளாரோடு தொடர்பு கொண்டு பெருமை பெற்ற பெருமக்கள் பலராவர்.

கெ.13.