பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

கெடிலக்கரை நாகரிகம்



          “நாட்கள் ளுண்டு நாள் மகிழ் மகிழின்
          யார்க்கு மெளிதே தேர் ஈதல்லே
          தொலையா நல்லிசை விளங்கு மலையன்
          மகிழா தீத்த இழையணி நெடுந்தேர்
          பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
          பட்ட மாரி உறையினும் பலவே.”

          “நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
          பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
          வறிது பெயர்குநர் அல்லர் நெறிகொளப்
          பாடான் றிரங்கும் அருவிப்
          பீடுகெழு மலையற் பாடி யோரே.”

மேலுள்ள நான்கு புறநானூற்றுப் பாடல்களின் சுருக்கமான கருத்துக்கள் முறையே வருமாறு:

“திருமுடிக்காரியே! உன்னிடம் பரிசு பெறப் பலர் வருகின்றனர்; அவருள் சிறப்பிற் குறைந்தவரும் உளர், மிக்க வரும் உளர். நீயோ, அவரவர் தகுதி யறியாது அனைவருக்கும் ஒரே மாதிரியாக நிரம்ப வழங்குகின்றாய். அத்துணைக் கொடை மடம் உடையவனாக இருக்கின்றாயே நீ!”

“காரி மன்னா! உன் உடைமைகளையெல்லாம் மற்றவர்க்கு வாரி வழங்கிவிட்டாய்! கற்பிற் சிறந்த உன் மனைவியைத் தவிர உனக்கென வேறு ஓர் உடைமையும் இல்லையே!”

“உலகில் மற்ற மன்னர்கள் மதுவுண்டு மயங்கி மகிழ்ந்திருக்கும் நேரத்தில் பரிசிலர்க்கு ஒரு தேரை எளிதாகக் கொடுக்கக் கூடும். ஆனால், மகிழ்ச்சியற்ற கடுமையான சூழ்நிலையிலும் மலையமான் காரி பரிசிலர்க்கு வழங்கியுள்ள தேர்களின் எண்ணிக்கை, அவனது முள்ளூர் மலையுச்சியில் பெய்யும் மழைத் துளிகளின் எண்ணிக்கையினும் மிகுதியாம்.

“பரிசில் வேண்டுவோர் நல்ல நாள் அல்லாத கெட்ட நாளில் புறப்பட்டு, வழியில் பறவைகள் கெட்ட நிமித்தம் (கெட்ட சகுனம்) காட்டியும் அதையும் மீறிச் சென்று, மலையமான் மகிழ்ச்சியற்றுத் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கும் கொடிய சூழ்நிலையில் அவனை அடைந்து, பேசத் தகாத பொருத்தமற்ற பேச்சுக்களை அவனிடம் பேசினும், அவன் அவர்களை வறிதே அனுப்பாமல், அவர்க்கு நிரம்பப் பரிசு வழங்கி அனுப்புவான்."