பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

கெடிலக்கரை நாகரிகம்



கிழக்கு நோக்கியுள்ள இக் கோபுர வாயில் கோயிலின் முதற்பெரு வாயிலாகும். இக் கோபுரத்திற்கு எதிரேயுள்ள மேட்டுப் பகுதி ‘கச்சேரி மேடு ‘ எனப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் நடுவில் (கி.பி. 935), முதல் பராந்தக சோழன் ஆண்டு கொண்டிருந்தபோதே அவன் மூத்த மகன் இராசாதித்த சோழன் திருநாவலூர்க் கோயிலின் உட்பகுதியைக் கருங்கல்லால் கட்டுவித்தான். அவனது திருப்பணியைப் பெற்றதனால் இக் கோயிலுக்கு ‘இராசாதித் தேசுரம்’ என்னும் பெயரும் சூட்டப்பட்டது. அன்று திருநாவலூர் இராசாதித்தனது மேற்பார்வையில் இருந்ததால் ‘இராசாதித்த புரம்’ எனவும் அழைக்கப்பட்டது. இராசாதித்தனது திருப்பணியால் உருவான கோயிலின் உள் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்: