பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474

கெடிலக்கரை நாகரிகம்



ஐவால் அரக்கு மஞ்சள்
தெய்வம் குளிக்கு மஞ்சள்.

அக்கூர் அடிவாழ அண்ணன் தலைவாழ.

ஏழலூர் எங்களுர் பெங்களுர்.

கீழ்க்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணிரண்டும் கறப்பான் கறந்ததைக் குடிப்பான்
தேனிலே வளர்வான் செல்வக் குமரன்.

கையேந்தி கையேந்தி கடலைச் சுடலேந்தி
ஏந்தி யேந்தி நாதா என்பிறப்பே வாராய்.

புதையார் புதைப்பார் மகளார் மதிப்பார்
மதிகொண்ட ராசன் திருக்கோலம் போவான்
திருவாரூர் திருச் செங்கநாடு
நாடுநல்ல நாடு - நல்ல பாம்பு தலையாட்ட"


"கொத்தவரங்காய் அடுப்பிலே கொத்துசாவி இடுப்பிலே.

சாதா கம்மல் காதிலே சைன் அட்டிகை கழுத்திலே
புதுமாப்பிளை பொன்னம்பலம் போட்டதெல்லாம் பித்தளை.

ஈரிகோ ராகவா என்தம்பி கேசவா
மாட்டை மடக்கும் மகாதேவா.

முக்கோட்டு சிக்கோட்டு பாகற்காய்
முள்ளில்லாத ஏலக்காய்.

நான்கே நடந்துவா - பாம்பே படர்ந்துவா.

ஐவாள் அரக்கு மஞ்சா - பம்பாய் குளிக்கு மஞ்சா

கூறும் கூறும் சித்தப்பா
கூழு குடிக்கும் பெரியப்பா.

ஏழண்ணன் காட்டிலே
எங்க ளண்ணன் வீட்டிலே
மஞ்சா சரட்டுக் குள்ளே.
கீழ்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணிலே கறப்பான் கறந்ததைக் குடிப்பான்
தேனிலே உண்பான் செல்வக் குமாரன்.