பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

தெளிவாகயில்லை. ஆனால் உருப்பிரிந்து விட்டன. தோன்ற ஆரம்பித்துவிட்டன.

கனைப்பு-யோசனை கலைந்து மிர்ந்தேன். ஐந்து விரல்களைக் குவித்து விரித்தார்.

உருவாகவே என்னுள் கோபம் படமெடுத்து விட்டது. ராஸ்கல், பாட்டிலுக்கு அடிப்போடுகிறான், மொங்தைக்கு சிங்கியடிக்கிறவனுக்கு வந்த வாழ்வு!

கான் மறுப்பில் தலையை ஆட்டி இரண்டு விரல்களைக் காட்டினேன். 'V' ஃபார் விக் ரி.

மனுசன் பதிலுக்கு விரலைக் காட்டக் கூட இல்லை. பாதங்களைத் தரை மண்ணுள் தோண்டி ஊன்றிக் கொள் ளும் விதத்திலிருந்தே, வெற்றி தனக்குத்தான் பண்ணிக் கொண்டு விட்டார். அவ்வளவு தன்னம்பிக்கை.

'கான் கொடுப்பேன் என்று உங்களுக்கு என்ன நிச்சயம்?’’

புன்னகை புரிந்தார். இந்தக் கஜப் போக்கிரியை ஏன் என் மனம் இன்னும் பன்மையிலேயே கினைக்கிறது? ஆளுக்கு, எதிராளியைக் கட்டியாளும் ப்ரஸ்ன்னம் இருந்தது.

உள்ளேபோய் ஐந்து கோட்டுகளைக் கொணர்ந்து, அவர் கைகளுக்கு மாறும் தறுவாயில் வேணுமென்றே தரையில் விட்டேன். என் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதுதான் எப்படி?

மிஸ்டர் ஜ்யார்ஜ் இணங்கவில்லை. புன்னகை புரிந்த வண்ணம் என்னைப் பார்த்துக்கொண்டே பாதங்களைத்

கே. எ-4