100
பால: ஆமாம், அந்த மூன்றும்தான்.பூட்ஸ் போல வடிவம் உள்ள ஒரு நாடு இருக்கிறது. அது எந்த நாடு?
பத்ம: இத்தாலி .
பால: பத்மஜா, சரியாகச் சொல்லிவிட்டாய்.
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் ஒன்று வருகுது'
என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
சுப்பிர: நாமக்கல் கவிஞர்.
பால: சரி, அவருடைய முழுப் பெயர்?
சுப்பிர : நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை.
பால: அதுவும் சரி. இப்போது கோடைக் காலம். எல்லாப் பெட்டிக் கடைகளிலும் சோடாக் கலர்களாக இருக்கின்றன. இந்தச் சோடா பானத்தை முதல் முதலில் தயாரித்தவர் யார், தெரியுமா?
இராஜ: ஐசக் நியூட்டன்
பால: இல்லை. பத்மஜா, சுப்பிரமணியம், உங்களால் கூற முடியுமா?
பத்ம, சுப்பிர : தெரியவில்லையே!
பால: சரி, நானே சொல்லிவிடுகிறேன். ஜோசப் பிரீஸ்ட்லி என்ற இங்கிலாந்துக்காரர்தான் முதன் முதலில் சோடா பானத்தைத் தயாரித்தவர்...முதல் முதலில் மோட்டார் கார்களைப் பெரும் அளவிலும், குறைந்த செலவிலும் தயாரித்தவர் யார்?
பத்ம : ஹென்றி ஃபோர்டு.