பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

பெயரிட்டார்கள். இந்தக்கடல்களில் எல்லாம் வந்து எந்தெந்த துறைமுகப் பட்டினங்களில் யவனர் வாணிகஞ் செய்தார்கள். என்னென்ன பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தார்கள், என்பதைக் குறித்து யவன நாட்டார் ஒருவர் கி. பி. 89-ஆம் ஆண்டில், பழைய கிரேக்க மொழியில் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் ‘பெரிப்ளஸ் மாரிஸ் எரித்ரை’ என்பது.[1]

அகுஸ்தஸ் சக்கரவர்த்தி யவன- தமிழ் வாணிகத்தைப் பெருக்கினான், தமிழ்நாட்டு மிளகும் முத்தும் இரத்தினக் கற்களும் யானைத் தந்தங்களும் யவன நாட்டுக்கு ஏற்றுமதி யாயின. மிளகு பெரிய அளவில் ஏற்றுமதியாயிற்று. அதற்காக அகுஸ்தஸ் சக்கரவர்த்தி பெரிய மரக்கலங்களைக் கட்டினான். மேலும், மிளகு முதலிய பொருள்களை வாங்குவதற்குப் பொன் நாணயங்களையும், வெள்ளி நாணயங்களையும் அனுப்பினான். இவ்வாறு கி.பி.முதல் நூற்றாண்டில் யவன-தமிழ்க் கடல் வாணிகம் சிறப்பாக நடக்கத் தொடங்கிற்று.

தமிழகத்தில் வந்த யவனர்கள் ஏற்றுமதி செய்து கொண்டு போன பொருள்களில் முக்கியமானது மிளகு. இதற்காகவே முச்கியமாகப் பெரிய கப்பல்கள் கட்டப்பட்டன என்றும், பொற்காசுகளும், வெள்ளிக் காசுகளும் அனுப்பப்பட்டன என்றும் உரோம நாட்டுச் சரித்திரத்திலிருந்து அறிகிறோம். இந்தச் செய்தியைச் சங்கச் செய்யுள்களும் கூறுகின்றன. சேர அரசர்களின் முசிறித் துறைமுகப் பட்டினத்தில் அழகான யவனக் கப்பல்கள் வந்து பொன்னைக் (பொற்காசை)க்


  1. * The Periplus Maris Erythrai