பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

Saletore in Procedings of the Deccan History Conference First Hyderabad Session. -1945) நீலக்கல் வாணிரத்தினால் புன்னாட்டாருக்குப் பெரும் வருவாய் கிடைத்தது.

(புன்னாட்டையடுத்து அதற்கு மேற்கில் இருந்தது துளு நாடு. அக்காலத்தில் துளு நாட்டை யரசாண்ட நன்னன் என்னும் அரசன் புன்னாட்டைக் கைப்பற்றிக் கொள்ள எண்ணி அதன்மேல் போர் செய்ய எண்ணினான். புன்னாட்டின் நீலக்கல் வாணிகம் நன்னனைக் கவர்ந்த காரணத்தால் அந்த வாணிகத்தின் ஊதியத்தைத் தான் பெறுவதற்கு அவன் எண்ணினான் என்று தெரிகிறது. இச் செய்தி தெரிந்தவுடன், நன்னனுடைய பகையரசனான சேரநாட்டுக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்பவன் தன்னுடைய சேனைத் தலைவனாகிய வெளியன் வேண்மான் ஆய் எயினான் என்பவனைத் துளுநாட்டு நன்னனுக்கு எதிராகப் புன்னாட்டு அரசனுக்கு உதவி செய்ய அனுப்பினான். ஆய் எயினன் புன்னாட்டு அரசனுக்கு உதவியாகச் சென்று, அவனை அஞ்ச வேண்டாம் என்று உறுதிமொழி கொடுத்ததோடு நன்னனுடைய துளுநாட்டின் மேல் படை எடுத்துச் சென்றான், நன்னனுடைய சேனாதிபதியான மிஞிலி என்பவன் பாழிப் பறந்தலை என்னும் இடத்தில் ஆய்எயினனுடன் போர் செய்தான். அந்தப் போரில் ஆய் எயினன் இறந்து போனான். பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென, யாழிசை மறுகிற் பாழியாங்கண், அஞ்சலென்ற ஆஅ யெயினன், இசுலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித், தன்னுயிர் கொடுத் தனன் சொல்லிய தமையாது.” (அகம். 396: 2-6) வெளியன் வேண்மான் ஆஅ யெயினன், அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, இழையணி யானை இயல்தேர் மிணியொடு, நண்பகல் உற்ற செருவிற் புண்கூர்ந்து ஒன்வாள் மயங்கமர் வீழ்ந்தென” (அகம். 208: 5-9). பிறகு சேர அரசனான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலுக்கும்