________________
10. எல்லாரும் உவப்பது* உலகில் எல்லாரும் உவக்கும் அல்லது விரும்பும் காரியத்தைச் செய்வது ஒருவராலும் இயலாது என அனை வரும் கூறுகின்றனர். ஒரு செயலைச் செய்தால் சிலர் மகிழ் வர்; சிலர் வெறுப்பர். ஆனால் எல்லாரும் உவக்கும் செயல் செய்தல் அரிதே. ஆயினும் அதற்கு ஒரு வழி கண்டுபிடித் தார் சங்ககாலப் புலவர் ஒருவர். நரிவெரூஊத்லையார் என்ற அப்புலவர் அந்த எல்லாரும் உவக்கும் செயலைக் காட்டுகின்றார். அது மிக எளிதான வழிதான். என்றாலும் இன்று மக்கள் அச்செயலை மேற்கொள்ளத் தயங்கு கின்ற னர். மனிதன் தன் நிலைகெட்டு விலங்காகிக் கொண்டு வரும் நாகரிக நாள் இது. மனிதனுக்கு உரிய பண்பாடு அனைத் தும் ஏட்டிலே இருக்கும் அளவோடு நின்று விட்டன. மனிதருள் சிலர் மற்றவர் பெறும் துன்பங் கண்டு உளம் மகிழும் அளவிற்கு முன்னேறி விட்டார்கள் என்று சொல்லலாம். மனிதப்பிறவி பிற உயிர்கள் அனைத்திலும் மேம்பட்ட பிறவி என்பார்கள். அதற்குக் காரணம் அவன் நல்லதன் நலனும் தீயதன் தீமையையும் பகுத் தறிந்து 'தான் இன்புறுவது உலகின்புறக் கண்டு' வாழ் வாங்கு வாழ்கின்றான் என்பதே யாகும். ஆயினும், இன்றைய மனிதன் அந்த நிலையில் இல்லை. மேடைமேல் விண் முட்டப் பேசியும், ஏடுகளில் பக்கம் பக்கமாக அற நெறி பற்றி எழுதியும் வாழும் மனித சமுதாயம், வாழும் வாழ்க்கையில் எவ்வளவு முறை வழுக்கி வீழ்கிறது! காரணம் உள்ளத்துள்ளேயே மனிதப் பண்பாடு மறைக்
- மலேயா மலர்