பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 கொய்த மலர்கள் ததேயாகும். அதனால் தான் நாட்டில் மாறுபாடும் பொறாமையும், சண்டையும்-ஏன்? பெரும் போர்களும் உண்டாகின்றன. இவையெல்லாம் எப்போது நீங்கும்? மனிதன் அல்வதைச் செய்யாது நல்லதைச் செய்தால் கொடுமை நீங்கலாம். ஆனால் அது எல்லோராலும் இன்று இயல்வதாகக் காணோம். அதனால் தான் அச்சங்க காலப் புலவர் உலக மக்களை நல்லது செய்யுங்கள் என்று கூற நினைத்து- அது முடியாதது என்று கண்டு -மற்றொரு வழியைக் காட்டுகின்றார். நல்லது செய்வதால் ஒருவனுக்கு ஒருவேளை அல்லல், பணிமிகுதியால் தொல்லை, இன்ன பிற ஏற்படலாம்; ஆனால் ஒன்றும் செய்யவேண்டாம் என்றால் அமைதியாக இருக்கலா மன்றோ! அதைத்தான் நரிவெரூ ஊத்தலையார் சொல்லுகிறார். 'உங்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் கவலையில்லை; நீங்கள் செய்யவே வேண்டாம்; ஆனாம் மற்றொன்றை மேற்கொள்ளுங்கள். ஆம். அதுதான் 'கெட்டதையாவது செய்யாதிருத்தல்' மற்றவருக்குத் தீங்கு செய்யா திருத்தல் வேண்டும் என் கின்றார் அவர். இது இன்றைய மனித சமுதாயம் மேற் கோள்ள வேண்டிய செந்நெறி. நாட்டில் நலம் செய்பவரி னும். அவலம் செய்பவர்களே அதிகமாக உள்ளார்கள். அவர்தம் அவலச் செயல் நீங்கினாலே நாட்டிலும் உலகிலும் பல நல்லவை நிகழும். நல்லது செய்து தான் உயிர்களை வாழவைக்க முடியும் என்பதில்லை. கொடுமையாளர் அல்லல் இழைக்கா திருப்பின் அதன் வழியே உலகில் எத்தனையோ தொல்லைகள் நீங்கும். அத்தகைய அல்லல் ஆற்றா நல்லவராகவாவது மக்கள் வாழவேண்டும் என்பது --அவர் ஆசை. அச்செயல் அம்மக்களுக்கும் நாட்டுக்கும் நல்ல தாவதோடு, அவர் களுக்கும் நற்பெயர் தந்து வாழவைக்கும். -அதுவே எல்லாருக்கும் உவப்பையும் அளிக்கும். அதில் யாரும் தொல்லையுற வேண்டியதில்லை. இச்செயலை மேற் SRIRNINAITH