பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வள்ளுவர் காட்டிய காதல் நெறி 121 ஒவ்வொரு குறளினும் புலவி நுணுக்கம் போற்றப் படுகிறது. இப்புலவி நீட்டிக்கலகா தல்லவா! எனவே அடுத்த அதிகாரத்திலேயே அப்பிரிந்த இருவரைச் சேர்த்து வைத்து, அவர்களைத் தனியாக இருக்க விட்டுத் தாம் அங்கிருந்து விடுதலைப் பெற்று விடுகின்றார் வள்ளுவர். எனினும், அட்படிப் புறப்படு முன் அவ்வூடலும் கூடலும் அவ்விருவர் தம் உள்ளத்தை என்னென்ன பாடுகள் படுத்துகின்றன என்பதையெல்லாம் நுணுகி ஆராய்ந்து காட்டிய விடுதலை பெறுகின்றார். தோன்றிய காலத்தில் துன்பம் தரினும், ஊடல் முடிவில் எல்லையில்லாத இன்பம் தருவதாகும். எனவே ஊடல் அந்தக் கூடல் இன்பத்தின் அளவைப் பெருக்கு கின்றது. உலகில் நீரும் நிலனும் கூடியன போன்று அவ்வாறு கலந்த உள்ளத்தவராகிய தலைவன் தலைவியர் ஊடுவதிலும் வேறு தெய்வ உலகவாழ்வே கிடையாது என்கிறார் வள்ளுவர். அவ்வழி, கூடலுக்கு ஏற்றம் தருவது உடலேயாகும், • ஊடலில் தோன்றும் சிறுதுனி நல் அளி வாடினும் பாடு பெறும்' (1323) என்றும். புலத்தலில் புத்தேள் நாடு உண்டோ ? நிலத்தொடு நீர் இயைந் தன்னார் அகத்து' (1322) என்றும் அவர் காட்டுகிறார். இவ்வாறு ஊடிப்பெறும் இன்பம் பெரிது என்பதை வள்ளுவர் இன்னும் பலவழிகளில் காட்டுகின்றார். ஊடு பவள் பெரும்பாலும் தலைவி; அவள் ஊடலை நீக்குபவன் தலைவனே. ஊடலில் யார் தோற்றாலும் தோற்றவர் வெற்றி பெற்றவரே என்றும், அவ் வெற்றி பின் நிகழும் கூடலி லே காணமுடியும் என்றும் கூறுகின்றார் வள்ளுவர்.