பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146 கொய்த மலர்கள் சொல்லுகிறேன். மாணவர்களை மட்டும் குறைக் கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. அவர் தம் உள்ளங்கள் கண்ணாடி போன்றவை. அவர் தம் எதிரில் காணும் நாட்டு நிலை- சமூக நிலை- கட்சி நிலை - கல்வி நிலை -ஆசிரியர் நிலை- அவர்கள் தலைவர் தம் நிலை அத்தனையும் அவர்களி டத்திலும் நிலவுகின்றன. இப்படியே ஒவ்வொன்றையும் எண்ணிப்பார்த்து நோயின் மூலத்தை அறிந்து மருந்து கொடுக்க வேண்டுமே ஒழிய வீணில் மற்றவரைக் குறை கூறல் தவறாகும். மாணவராகிய கண்ணாடியின் முன் நல்ல உருவங்கள் - அவற்றின் செயல்கள் - அதன் வழி உரு வாகும் உணர்வுகள் - அவ்வுணர்வில் தோன்றும் ஒழுக்க நெறிகள் நிறுத்தப்பெற வேண்டும். அரசாங்கமும் பிறரும் அதைச் செய்து பார்க்கட்டும். பிறகு அவர்களே கூறுவார்கள். 'மாணவர்கள் நல்லவர்களே' என்று; ஆம் மாணவர்கள் நல்லவர்கள் தாம். அந்த நல்லவர்களை நல்லவர்களாகவே வளர்த்து, நல்லவர்களாகவே வாழச் செய்து, வருங்காலச் சந்ததியை உருவாக்கும் பொறுப்பு எல் லோருக்கும் உரியது. வாருங்கள் - சேர வாருங்கள்திரண்டு வாருங்கள் - செம்மைப் பணிபுரிய வாருங்கள் -- செயலாற்றுங்கள் / மாணவச் செல்வங்கள் நல்ல வருங்காலச் செல்வங்களே என்பதைச் செயல்வழி ஒன்றிக்காட்டி உயர்த்துங்கள்; நீங்களும் உயருங்கள் என்ற வேண்டுகோளுடன் இக்கட்டுரையை முடிக் கின்றேன்! மாணவர் நல்லவர்! வாழ்க அவர் நல் உள்ளப்! வளர்க அவர் அறிவுத்திறன்! சிறக்க அவர் எதிர் காலம் செழிக்க அவர் செயல் முறைகள்!