பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ண ஆடைகள்* மனிதன், விலங்கு பறவை முதலியவற்றிலிருந்து வேறுபடுகின்றான், பிறவற்றிற்கு இல்லாத ஒரு தனி உணர்வு-பகுத்தறிவு- நல்லதையும் கெட்டதையும் பாகு படுத்திக் காணும் நல் அறிவு- அவனிடம் இருக்கிறது என்பர். ஆறாம் அறிவினைப் பெற்றது தான் அவனைப் பிறவற்றிலிருந்து பெரியவனாக்கியது உண்மையே! எனினும் இன்று மனிதன் அந்த அறிவினை இழந்து, விலங்கினும் கேடான வாழ்வுவாழத் தொடங்கிவிட்டான் என்று சமயத் தலைவர்களும், அரசியல் அறிஞர்களும், பிறரும் நாள் தோறும் பேசிக்கொண்டே இருக்கின்றனர். அவனுடைய அக நலம்- உள்ளுணர்வு-நிலை கெட்டு விலங்குணர்ச்சி யைப் பெறுகின்றது என்பர். என்றாலும் மனிதனைப் பிறவற்றினின்றும் வேறுபடுத்திக் காட்டும் சிறந்த ஒன்று ஆடையே யாகும். ஆடை, தான் அணியப்பெற்ற மனிதனை உயர்வுடையவனாக உலகுக்குக் காட்டுகின்றது. உள்ளம் நிலைகெட எண்ணும் போது, அவ்வுள்ளமே * இத்தகைய உடையொடு உலவும் நாம் நிலை கெடலாமா?” என்ற உணர்வை ஊட்டத்தான் செய்கிறது. எனவே மனிதனை மனிதனாக வாழவைக்கும் முயற்சியில் ஆடைக்குப் பெரும்பங்கு உண்டு. அதனாலேயே 'ஆடையில்லா மனிதன் அரை பனிதன்' என்ற பழமொழி நாட்டில் பிறந்தது. ஆடை மனிதனுக்கு நெடுநாட்களாகவே உரிய ஒரு பொருள். அவன் தன் அறிவுபெற்ற காலத்திலேயே

  • சேலம் வண்ணக் களஞ்சியத்தார் அவையின் வெள்ளி 'மலரில் வந்தது. (பிப்ரவரி'60)