பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் 37 இக்காலத்துக்கும் அடுத்துத் தெளிவாக காணும் பல்லவர் காலத்துக்கும் இடையே தமிழக வரலாற்றிலேயே ஓர் இருண்டகாலம் வருகிறது. அந்த இருண்ட காலத் தொடக்கம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு என்பர். நமது கால எல்லை கி. மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கிக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை அமை கின்றது எனக்கொள்வது பொருந்தும் என நினைக்கிறேன். சைவம் என்பது யாது? இனி, சைவம் என்பது யாது எனக் காண வேண்டும். அறிஞர் பலர் அதுபற்றிக் கண்டும் காட்டியும் உள்ளனர். சிவசம்பந்தமுடையது சைவம். சிவம் யாது? எத்தகையது? சைவ சித்தாந்த சமரச அன்பர்களுக்கு அதுபற்றிய விளக்கம் தேவையில்லை. சிவனை இடையறாது எண்ணி எண்ணி உள்ளத்து உணர்வால் போற்றி வழிபடும் புண்ணிய வினையே வாழ்வின் பயன் எனப் பல ஆண்டு களாகப் பல அரும்பெரும் புலவர்கள் காட்டி வரும் சிவனெறிச் சிறப்பினை என்னால் காட்டமுடியும் கொல்? இயலாது! எனினும், கொண்ட பொருளுக்கு ஏற்ப ஓரிரண்டு காட்டி அமைகின்றேன். 'சிவம்' என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. நன்மை என்பது ஒரு பொருள். முத்தி என்ற பொருளும் உண்டு, செம்மை என்றும் சொல் லுவர். 'சிவம் என்னும் நாமம் தனக்கே உரிய செம்மேனி அம்மான்' என்ற சிவனைப்பற்றிய அடியும் எண்ணத்தக்கது. எனவே, செம்மை என்பது எதுவோ - அனைத்துக்கும் அப்பாலாய் நின்று அனைத்தையும் ஆக்குவது எதுவோ - உலக உயிர்களுக்கு நன்மை தருவது எதுவோ- எல்லாரும் | இன்புற்றிருக்க நினைப்பது எதுவோ அதுவே சிவம் கொ . ம-3