பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-48 கொய்த மலர்கன் ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையின் கீழ்ப்புகுந்து அம்மலை எடுக்கல் செல்லாது உழைப்பவன் போல" (கலி. 38, 1-5) என்று இராவணன் வரலாறு மட்டுமன்றிச் சிவன் மேருவை வில்லாக வளைத்த வரலாறும் அப்பாட்டில் குறிப்பிடப் பெறுகின்றது. முப்புர எரிப்பு மேருவை வளைத்த வரலாறு ஈண்டுக் குறிப்பாகக் காட்டப் பெறினும், மற்றொரு சங்கப் பாடலில் நன்கு விளக்கமாக எடுத்துக் காட்டப் பெறிகின்றது. திரிபுரங் களை வென்ற வரலாறே மலையை வில்லாக வளைந்தது. பெரும்பாம்பே காணாக நின்றது. அவ்வில் லிடை நாணேற்றி அம்பு காட்டி மூன்று புரங்களையும் எரித்தான் சிவபெருமான் என்பதை, ஓங்குமலைப் பெருவில் பாம்புநாண் கொளீ இ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறைமிடற்று அண்ணல் காமர் சென்னி பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல ' (புறம். 56) என மதுரை மருதன் இளநாகனார் நன்கு காட்டுகின்றார், இதில் மூவெயில் உடற்றிய வரலாறு மட்டுமன்றிச் சிவனைத் கறைமிடற்று அண்ணலாகவும், பிறை அணிந்தவனாகவும், நுதல் வழி காட்டத்து இறையோனாகவும் காணும் வரலாறுகளும் அமைந்துள்ளன. மற்றும், இச் சிவன் மூவெயிலை உடற்றிய காரணத் தை பும், அவனுடைய கணிச்சிப்படையையும் கலித்தொகை காட்டுகிறது: "மடங்கல்போல் சினை இய மாயஞ்செய் அவுணரைக் கடத்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்