பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கொய்த மலர்கள் திருட்பெருந்துறையில் குதிரை வாங்கச் சென் றவா தாம் வாதவூரர். எனினும், அங்கே இறைவனால் ஆட கொள்ளப் பெற்றார். அதற்கிடையிலும் தன் கடமையை மறக்கவில்லை. அப்போது நல்ல குதிரைகள் இல்லை போலும். காலந்தாழ்த்துக் கடல்வழி வரும் குதிரைகளைப் பெறக் காத்திருந்திருப்பார். அதற்குள் அவர் கடவுளன்பு கோயில் கட்டத் தூண்டியது. கொண்டு வந்த பணத்தை அதற்குச் செலவிட்டார். அரசனும் சமயப்பற்று உடை யவன் ஆதலின் அதற்கு இசைவான் எனவும், பிறகு வேறு பொருள் கொண்டு குதிரை வாங்கலாம் எனவும் அவர் உள்ளம் எண்ணிவிட்டது போலும். எனவே செயல் தொடங்கப் பெற்றது. கடைசியில் குதிரை வாங்கவில்லையே என அரசன் ஆள் அனுப்பிய போது தான் தன் நிலை உணர்ந்தார். ஆயினும் அவர் அரசனிடம் கொண்ட பொருளைக் கோயிற் பணிக்குச் செலவிட்ட தைக் கூறியிருந்தால் அவன் மகிழ்ந்து குதிரை வாங்க வேறு பொருள் கொடுத்திருக்கக் கூடும். வாதவூரர் அவ்வாறு செய்யாது, இறையருளால் 'ஆவணி மூலத்' தன்று குதிரை வரும் என உணர்ந்து அவ்வாறே அரசனிடமும் சொல்லிவிட்டார். அரசன் அனைத்தும் அறிவான். பணம் பணிக்குச் செலவாயிற்று எனவும் தெரியும். எனினும் * ஆவணி மூல' எல்லை அமைத்த வாதவூரரை அவன் ஒன்றும் செய்யவில்லை. காரணம், அவனுக்கு அச்செயல் உடன்பாடு என்பது தான். அனைத்தும் அறிந்து அவன் இருந்த நிலையை, • புரசைமா வயப்புரவி தேர்ப்பொருநர் போய்ப் பொறி வண்டு ! இரை செய்தார் முடிவேந்தன்முன் இறைஞ்சினர் உள்ளது உரைசெய்தார் அதுகேட்டு ஒன்றும் உரைத்திலன் இருந்தான் நிரைசெய்தார் பரிவரவினை நோக்கிய நிருபன் ' (62)