பக்கம்:கொய்த மலர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கொய்த மலர்கள் போன்று அவர்கள் அன்று அத்துணை மெல்லிய ஆடை களே நெய்தார்களாம். இன்னும் பாம்புதோல் உரித்தது. போன்ற பல வண்ணக் கண்கவர் ஆடைகளையும் அவர்கள் கெய்தார்கள் எனக் காண்கின்ருேம். 'பாலாவியன்ன மேலாடை நெய்வோர்' என்றும், 'பாம்பு உரித்தன்ன அறுவை நல்கி' என்றும், பழம் பெரும் இலக்கியங்கள் பாராட்டுகின்றன. பிற்காலத்தில், ஒன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்த சுந்தரர் 'காம்பு, நேத்திரம் போன்ற அழகிய கரை வேலைப்பாடமைந்த ஆடைகள் தமிழ் நாட்டில் செல்வரால் விரும்பிப் போற்றப் பட்டமையைக் கூறுகின்ருர். இத்தனையும் கையால் நெய்யப்பட்டனவேயன்றி வேறு வகையாக வளர்ந்திருக்க முடியாது. எனவே கடைச் சங்க் காலத்துக்கு முன் தொடங்கி-மோகன்சோதாரோ ஹாரப்பா காலமாகிய இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன் இருந்து இன்றுவரை, பலப்பல வகையில் பலப்ப்ல முறைகளில் வண்ண ஆடைகளையும் மெல்லிய ஆடைகளையும், பட்டிலும் மயிரிலும் பருத்தியிலும் கைத் தறி வழி கெய்து வந்த நம் காட்டுச் சமுதாயம் இன்றும் அத் தொழில்துறையைப் போற்றிப் பாராட்டுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்ருகும். என்ருலும், இன்னும் அந்தப் பழங்காலத்து மக்கள் நெய்தது போல மெல்லிய-மிக நுண்ணிய-வண்ண ஆடைகளை இன்றைய மக்கள் நெய் யக் கற்றுக் கொண்டார்கள் என்று எண்ண முடியவில்லை. காரணம் எத்தனையோ உள. ஒன்று இன்றைய கைத் தறித் தொழில் 'மில்லோடு மல்லாட வேண்டியுள்ளது. ஆனல் அது தவிர்க்க முடியாத ஒன்று. நாகரிகம் நமக்குத் தேடித்தந்த விலக்கமுடியாத தொல்லைகளுள் அதுவும் ஒன்று. - ~ ஆங்கிலேயேர் ஆட்சிக்கு வருமுன் இந்திய காட்டு "ட்ாக்கா மஸ்லின் மிகச் சிறந்ததாகப் போற்றப்பட்டு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/12&oldid=812344" இலிருந்து மீள்விக்கப்பட்டது