பக்கம்:கொய்த மலர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கொய்த மலர்கள் அந்த இன்பத்தைப் பெற்ற அவ்விருவரல்லாது யாரே கூறவல்லார்? எனவே, வள்ளுவர் அவர்தம் ஊடலும் கூடலும் இயைந்த இராப் பொழுதை, அவர்தம் வாயாலேயே டுேக' என வாழ்த்தித் தாமும் அவர்களிடம் இருந்து விடை பெறுகின்றனர். ' ஊடலில் தோற்றவர் வென்ருர் அதுமன்னும் கூடலில் காணப் பெறும்' (1817) எனறும. ஊடுக மன்னே ஒளிஇழை: யாம்இரப்ப கீடுக மன்னே இரா (.319) r என்றும் கூறி, இறுதியாக, ஊடுதல் காமத்துக்கு இன்பம் அதற்கின்பம் - கூடி முயங்கப் பெறின் (1330). என்று காட்டி, அவர்தம் இன்ப வாழ்வில் அவரைவிட்டுத் தம் குறளேயே முடித்துக் கொள்கிருர் வள்ளுவர். இதுவே "வள்ளுவர் காட்டிய காம வாழ்வு', அவர் காட்டிய 350 குறட்பாக்களில் நான் ஒரு சிலவே எடுத்துக் காட்டினேன். இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெரு நூலை அமைக்க உதவும். இன்னும் பிற குறட்பாக்களும் உயரிய நலம் பயப்பன. அவற்றையெல்லாம் வாய்ப்பு உள்ளவர் தனித்தனியாகப் பயின்று மகிழ்வார்களாக! இவ்வாறு காதல் என்பது உள்ளத்து உணர்வாக அமைவது என்பதும், அது ஒத்த பண்பும் நலமும் பிற கல்லியல்புகளும் பொருந்திய ஒருவன் ஒருத்தி மாட்டுத் தோன்றுவதென்பதும், அவ்வாறு தோன்றுவது திடீ. ரெனத் தோன்றி மறைவது அன்று என்பதும், அக்காதல் பிறவிதோறும் தொன்றுதொட்டு அடுத்து என்றும் வற். ருது வளர்ந்து வருவது என்பதும், அவ்வாறு உள்ளத்தால் ஒன்றியவர் யாராலும் என்றும் பிரிக்க முடியாத பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/124&oldid=812353" இலிருந்து மீள்விக்கப்பட்டது