பக்கம்:கொய்த மலர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் யார்? i49 வெறும் கல்லே. எனவே அது அறிந்தார் உள்ளத்தே கலையாக-நாயாக-நல்ல கலைப் பெட்டகமாகக் காட்சி தருகின்றது. அதைக் கல்லாகக் காணபவர்கள் அந்தக் கல்ைவடிவான காயைக் காண இயலாது. அல்லா தாருக்கோ அது கலைச் செல்வம். ஆம்! கலைஞனுக்குப் பொருந்தும் இந்த் நிலையும் பண்பும் கவிஞனுக்கும் பொருங் துவனவே. அறிந்தறிந்து மகிழ்வாருக்கு அவன் கவிதை தெவிட்டாத தெள்ளமுதம். உள்ளத்தை உயர்த்தும் உயர் மருந்து-வாழ்வை வளமாக்கும் வற்ருத செல்வம். அல்லாதாருக்கு ஒரு வேளை அது வெறும் சொற்கட் டாகும். கவிதை அதைப் பாடுபவனுக்கும் மேலானது. கவிதை பாடும் புலவனின் தலைவகைப் பணியாற்றும் நிலை உடையது. கவிதை தான் உயர்ந்து தன் வழிப் பாடுபவனைப் பற்றி ஈர்த்து அவனே என்றும் வாழ்பவனுகச் செய்கிறது. கவிதை எல்லா வேறுபாடுகளையும் மறக்கச் செய்கிறது. இன்னர் இனியார் என்னது, உற்ருர் அற்ருர் என்று பகுத்துப் பார்க்காத நல்ல கவிதை காட்டில் எல்லார் உள்ளத்தும் இடம் பெறும். ஆங்கி லேயன் மேல் வெறுப்புற்று அவனே காட்டை விட்டு ஒட்டக் கங்ங்ணம் கட்டிச் செயலாற்றிய அந்த நாளிலும் இந்தியர் ஆங்கிலக் கவிஞர்களைப் போற்றிப் பாராட்ட வில்லையாl ஆம்! கவி தன்னைப் பாடியவனினும் மேம் பட்டதாகி, அறிவறிந்த உள்ளங்களைத் திறந்து, அவற்றுள் கிலத்த இடம் பெற்றுச் சிறக்கிறது. மக்கள் உள்ளம் தொடும் கவிதை எதுவும் காலத்தேவன் கையில் சிக்காது வாழும் என்பது உறுதி. சங்க காலப் புலவர் தம் பாடல் களுள் பல அத்தகையனவே. - - சாகா வரம் பெற்ற கவிஞர்களின் தன்மை தனிச் சிறப்பு வாய்ந்தது. கவிஞவைான் உயர்ந்த கற்பனைத் கொ. ம. 10 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/151&oldid=812413" இலிருந்து மீள்விக்கப்பட்டது