பக்கம்:கொய்த மலர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கொய்த மலர்கள் திறனும் விரிந்த கல்நோக்கும் உடையவனகி, அவற்றை உலகுக்குத் தெள்ளத்தெளியக் காட்டி விளக்குபவகை இருக்க வேண்டும் என்று கவிஞனுக்கு இலக்கணம் கூறுவர் மேலேகாட்டு அறிஞர். அவன் கண்ணுக்கு வாளுேங்கிய இமயமலையும் ஒன்றுதான், நெளிந்து செல்லும் சிறு காங் கூழ்ப் புழுவும் ஒன்றுதான். உயர்ந்த இமயத்தை அண்ணுந்து நோக்கும்போது, மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று வீறு தோன்றப் பாடு கின்றது அவன் வாய். ஊர்ந்து செல்லும் உலையாத நாங் கூழ்ப் புழுவை நோக்கும்போது ஒஓ நாங்கூழ்ப் புழுவே, உன்பாடு ஒவாப் பாடே' எனப் பாராட்டி வியக்கிறது அவன் வாய். அவனுடைய உயரிய உள்ளத்திலே அனைத் தும் வேறுபாடற்ற சமநிலையில் காட்சி அளிக்கும். அக் காட்சிவழி கற்பனை மிதக்கும். கற்பனை முற்றிக் கவிதையாக உருப்பெற்று ஓடி வந்து உலகுக்கு நல்லமுதுாட்டும். அதன் வழி உலகம் நலம் பெறும். இதைத் தான் இந்த நூற்ருண்டில் வாழ்ந்த கவிஞன்பாரதி, 'உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலப்பெருக்கும் கவிப் பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருந்த குருடரெலாம் விழிபெற்றுப் பதவிகொள்வார்' எனப் பாடிச்சென்ருன். எனவே காட்டையும் உலகையும் வாழ்விப்பன உண்மையில் உயரிய கவிதைகளும் அவற்றை ஆக்கிய கவிஞர்களுமே யாவர். இன்று தமிழர்தம் தொன்மையையும் பண்பையும் காகரிகத்தையும் பாராட் டக் காரணமாயிருப்பவர் சங்க கால்க் கவிஞர்களேயன்றி, வேறு யார்? வாழும் கவி மற்றவர் உள்ளங்களைத் தொட வேண் டும் என்று கண்டோமல்லவா! அவ்வாறு தொடுவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/152&oldid=812414" இலிருந்து மீள்விக்கப்பட்டது