பக்கம்:கொய்த மலர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் யார்? 151. அதில் நல்ல கருத்துக்கள் அமைந்திருக்க வேண்டும். வெறும் சொற்களை மட்டும் அடக்கி எதுகை மோனே இட்டுக் கவியாக்குவர்களேயானல் அவை நெடுங்காலம் வாழா என்பதை வரலாறு காட்டுகின்றது. ஆனல் பொருள் நலத்தைப் பொருந்த வைத்து, இழுமென் மொழி யால் இன்பக் கவிதை திட்டினல், தீட்டுவார் இயற்பெயர் மாய்ந்துவிட்டாலும் அவருக்குக் கவிதை தன்வழி ஒரு புதுப் பெயரை இட்டு உலகில் வாழ வைக்கும் என்பது உண்மை. சங்க காலச் செம்புலப் பெயல் ரோரும், தேய்புரிப் பழங் கயிற்ருரும் அவ்வாறு இன்றும் வாழ்கின்ற வர்களன்ருே! எனவே, கவிதைக்கு வெறும் சொற்களைக் காட்டிலும் பொருளே இன்றியமையாது வேண்டப் படுவது. இதைத்தான் யாப்பு என்ன என்பதை விளக்க வந்த இடத்தில் தொல்காப்பியனர், எழுத்து முதலா ஈண்டிய அடியில் குறித்த பொருளை முடிய நாட்டல் . யாப்பென மொழிய யாப்பறி புலவர் (பொருள் 384) எனப் பொருளே முற்றக் காட்ட வேண்டிய தன்மையை விளக்கிக் காட்டினர். எனவே கவிஞன் சிறந்த பொருளின் அடிப்படையிலேயே தனது கவியை எழுத வேண்டும் என்பது தெளிவு. பொருளே கவிதைக்குச் சிறந்தது என்ருலும், அந்தப் பொருளின் நிலைக்கேற்ற நல்ல சொற்களையே கவிஞன் தன் கவிதைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டுவதும் இன்றி யமையாததாகின்றது. எனவே, சொல்லும் பொருளும் பின்னியதே கவிதை. அது கவிஞன் உயர் உள்ளத்தின் அடிப்படையில் அமைவது. இவ்வாறு பாடும் கவிஞனது கவியின் ஆழத்தை அளந்தறிதல் கடினமே. ஒரே குறளுக்கு எத்தனை எத்தனை புதுப் பொருள்கள் காலங். தோறும் கண்டுகொண்டே இருக்கின்ருேம். அதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/153&oldid=812416" இலிருந்து மீள்விக்கப்பட்டது