பக்கம்:கொய்த மலர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடையும் தையற்கலையும் 313; அவன் மரப்பட்டைகளையும் விலங்கின் தோல்களையுமே. தன் புற உறுப்புக்களை மறைக்கும் ஆடைகளாகக் கொண் டான். அத்தகைய புறநாண்வழி உறுப்புக்களை மறைத்து வாழாத மனிதனை நிறை மனிதகை அன்றைய மக்கட் சமூகமே மதிக்கவில்லை. அதேைலயே 'ஆடையில்லா மனிதன் அரைமனிதன்' என்ற பழமொழி நாட்டில் எழுங் தது. எனவே மனிதன் அக நலமெல்லாம் ஒருங்கே பெற்ற போதிலும், புற அழகாகிய ஆடை புனேயும் அமைவு இன் றேல் அவன் நிறை மனிதனுக மாட்டான். எனவே மனி தன் மனிதகை வாழத் தொடங்கிய அந்த நாளிலேயே ஆடையும் தோன்றி விட்டது. விலங்குகளின் தோல்களையும் மரப்பட்டைகளையும் ஆடைகளாகப் பயன்படுத்திய மனிதன், மெல்ல மெல்ல, அறிவு வளர வளர, பிறவகைகளிலும் தனது ஆடை வகைகளே ஆக்கிக்கொண்டான். பருத்தி ஆடையே அவற்றுளெல்லாம் சிறக்க இடம் பெற்றது. பட்டாலும், மயிராகிய கம்பளத்தாலும் கூட அவன் ஆடை கெய்யத் தெரிந்திருந்தான். இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு: களுக்கு முன்பே தமிழர் இம்மூவகைப் பொருள்களிலும் ஆடை கெய்தனர் என்பதை. ' நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூறு அடுக்கத்து கறுமடி செறிந்த அறுவை வீதியும் (சிலம்பு - 14, 204:07). என இளங்கோவடிகள் ஆடை விற்கும் கடைகளே மதுரைத் திருநகர்மேல் ஏற்றிக் கூறுகின்ருர், மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழ் நாடு நல்ல நாகரி கத்தில் திளைத்திருந்தது. எனவே இதில் வாழ்ந்த மக்கள் பல்வேறு வகைகளில் ஆடை அணிகலன்கள் செய்து தம்மை அழகுபடுத்திக் கொண்டார்கள் என அறிகிருேம். இவ்வாறு ஆடை கெய்து தம் புற அழகினேப் புனேந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/33&oldid=812472" இலிருந்து மீள்விக்கப்பட்டது