பக்கம்:கொய்த மலர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I32 கொய்த மலர்கள் வாய்மையால் அக அழகையும் வழுவாது காத்து வக் தார்கள் தமிழ் மக்கள், நெய்த ஆடையைப் பல்வேறு பெயர்களில் அழைத்தார்கள், வேட் டி. துண்டு, மடி, கலிங்கம், அறுவை போன்ற பல பெயர்களைக் காண் கிருேம். எல்லாப் பெயர்களையும் காரணம் காட்டியே கொண்டார்கள். இவ்வாறு பழங்காலத்தில் ஆடைகளைச் செய்து உடலில் அப்படியே சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்று எண்ணுவோமாயின் நாம் தவறி விட்டவராவோம். ஆடவ வரும் பெண்டிரும் அழகாகப் பல்வேறு வகையில் தையல் இட்ட உடைகளே உடுத்தியிருந்தனர். தையல் என்ற சொல் பெண்களைக் குறிக்கும்; தையல் தொழிலையும் குறிக்கும். ஒரு வேளை அக்காலத்தில் இத் தையல் தொழிலைப் பெரும்பாலும் பெண்கள்தாம் செய்து வந்தார்களோ என்றும், அதேைலயே அத்தொழிலுக்கு அவர் பெயரே அமைந்து விட்டதோ என்றும் கினேக்க வேண்டியுள்ளது. இலக்கணம் கூறவந்த பவணந்தியார் நூல் ஆக்கும் பணி பெண்களுடையதே என்னுமாறு இரு பொருள்தர ஒரு வெண்பாவைத் தருகிருர், பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத கையே வாயாக கதிரே மதியாக மையிலா நூல்முடியு மாறு ' என்ற பாயிரப் பாட்டே அது. எனவே நூல் நூற்றும், நெய்தும், தையல் வேலை செய்தும் பெண்கள் அக்காலத்தில் சிறந்தார்கள் எனக் கொள்ளலாம். சங்க காலத்திலேயே பெண்களும் ஆண் களும் பலப்பல வகையான ஆடைகளைத் தைத்து அணிக் தார்கள் எனக் காண முடிகிறது. அவற்றுள் ஒன்றை மட்டும் இங்குக் கண்டு அமைவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/34&oldid=812474" இலிருந்து மீள்விக்கப்பட்டது