பக்கம்:கொய்த மலர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கொய்த மலர்கள எதுவோ அதுவே சிவம் எனப்படும். அச் சிவசம்பந்த முடையதே சைவ நெறி. இதுபற்றி விளக்கிப் பேசின் வாழ்வின் எல்லை போதாது. எண். 'நாடெங்கும் நலம் பெற்று வாழ வழி ಎ{} என்ற சைவம்' என்னும் அளவோடு அமைகின்றேன். சக்தியும் சிவனும் இச் சிவநெறி பற்றிய விளக்கங்கள் பல. இந்நெறிக்கு முதல்வன் ச் வன். அவனைப் பிரியா திருப்பவள் சக்தி. சத்தியும் சிவமும் கலந்து அன்றுமுதல் ஆற்றும் அலகிலா விளையாடல்களைப் பாடுவனவே சைவ சமய நூல்கள் அனைத்தும். அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் இருக்கும் ஆண்டவனே வழிபட்ட அடியவர்கள், அவனைப் பலப்பல வகைகளில் பலப்பல தோற்றங்களில் கண்டு வழி பட்டார்கள். அதனலேயே உலகில் பல்வேறு சமயங் களும், சைவ சமயத்துக்குள்ளேயே பல்வேறு வழிபடு முறைகளும், பல் வேறு கடவுளர் அமைப்புக்களும் தோன்றலாயின. மணிவாசகர், தென்னு டுடைய சிவனே போற்றி எங்காட் டவர்க்கும் இறைவா போற்றி என்று இதேைலயே கடவுள் தன்மையை எடுத்துக் காடடினா, கடவுள் ஒருவனே இச் சிவன் உருவமாகவும் அருவமாகவும் அருவுருவ மாகவும் இருந்து ஐந்தொழில் புரிந்து உயிர்களின் வாழ்வை வளம்பெறச் செய்யும் நிலையில் பலப்பல வேடங் களில் விளையாடி வினேயாற்றுகின்ருன். அவ்வப்போது அவனுடைய தோற்றத்தில் எத்தனையோ மாறுதல்கள் காணுகின்றனர். அடியார்கள். அவ்வவற்றைப்பற்றி அவனுக்குப் புதுப்புது பெயர்கள் குட்டுகின்றனர். லே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/40&oldid=812488" இலிருந்து மீள்விக்கப்பட்டது