பக்கம்:கொய்த மலர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் 49% உடன்ற்க்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின் சீரருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில் வரைபிளந்த (கலி.-2): என்ற பாலக் கலியில் அவனது மூவெயில் வென்ற: முக்கண் சிறப்பும் பிறவும் பேசப்படுகின்றன. சடை முதலியன சிவனது தாழ்ந்த பிறை அணிந்த சடை, முக் கண், கறைமிடறு இவற்றைச் சங்கநூற்பா வடிகள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. "மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதல் முக்களுன் உருவேபோல்' (கலி-204), என்ற கலித்தொகையும், 'ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் ருேனும்' (புறம்-55): என்ற புறப்பாடலும், 'பணியி யரத்தை கின்குடையே முனிவர் முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே" (புறம்-6). என்ற காரிகிழார் பாடலும், "பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே" (புறம்-32) என்ற ஒளவையின் பாடலும், " மிக்கொலி தாழ்சடை மேவரு பிறைநுதல் முக்களுன்" (கலி-114). " பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடறு” (கலி-205): என்ற கலித்தொகை அடிகளும், சிவனுடைய உடலி லமைந்த பல்வேறு தோற்றப்பொலிவுகளை நன்கு. விளக்கிக் காட்டுகின்றன அன்ருே இவையே அன்றிச் சிவனைப்பற்றிய வேறு சில குறிப்புக்களும் சங்க கால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/51&oldid=812512" இலிருந்து மீள்விக்கப்பட்டது