பக்கம்:கொய்த மலர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கொய்த மலர்கள் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று அவன் 'ஆலமர் செல்வகை அமர்ந்த சிறப்பாகும். ஆல முற்றம் கல்லாலின் புடை அமர்ந்து வல்லார்க்கு அறமுரைத்த பெருந்திறல் பிற்காலச் சமய இலக்கியங்களிலெல்லாம் நன்கு பேசப்படுகின்றது. சங்க இலக்கியங்களும் சிவ னுக்கு உரிய பல்வேறு சிறப்புக்களோடு இவ் வால முற்றத்தையும் குறிப்பிடுகின்றன. ஆலமுற்றம் சிவ .ணுக்கே உரியதென்பதை, " ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய பொய்கை சூழ்ந்த பொலன்மன மகளிர்" (அகம். 181) என அகநானூறு ஆலமுற்றத்தை அவனுக்கே உரியதாகக் காட்டுகின்றது. இதையே, " ஆலமர் கடவுள் அன்னங்ன் செல்வம் வேல்கெழு குரிசில் கண்டேன் ஆதலின்" (புற. 198) என்று வடம வண்ணக்கன் பேரிசாத்தருைம், " நீலநாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த _ ஆயும்' (சிறுபாண். 96-99) என்று கல்லூர் நத்தருைம் பாடியிருப்பதைக் காணலாம். சூலம்-கொடி முதலியன இவ்வாறு ஆலமர் செல்வய்ை. அறமுரைத்த அண்ண லாய்-அம்மையப்பராய் விளங்கிய சிவன் குலம் பிடித்த சுடர்ப்படை உடையவனுகவும் உள்ளான் என்பதை, 'சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுள்" என்று பதிற்றுப்பத்து அடி காட்டுகின்றது. இச் சிவ பெருமான் உமையோர் பாகத்தன் ஆகி உள்ளமையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/52&oldid=812514" இலிருந்து மீள்விக்கப்பட்டது