பக்கம்:கொய்த மலர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேர் வேண்டேன் 71 என்ற பெருமொழி உண்மைத் தொண்டாற்றுவார் ஒவ் வொருவரும் உள்ளத்தே கொள்ள வேண்டிய ஒருகல் அருமொழியாகும். - உலகு இன்று எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்பவர் மிகச் சிலர். அவ ருள்ளும் தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளராய்' உள்ளவர் மிகமிகச் சிலர், அவர்தம் உளத்துரய்மையும், அறிவுப் பணியும் அன்புத் தொண்டும் அவரை எப்படியோ உலகுக்கு அறிமுகம் செய்து விடுகின்றன. அதல்ை அவ்வாறு பெருத மற்றவர் பொருமைகொள்ள நேரிடு கிறது. இந்த கிலே உண்மையில் வேண்டப்படாதது. சிலர் தமக்குப் புகழ் வேண்டும் வேண்டும் என முயன்று ஓடினும் அது எட்டாமல் ஓடுகிறது. சிலர் வேண்டேன் என ஒதுங்கினும் காவிப் பிடிக்கிறது. ஆம்! புகழ் வேண்டா மாணிக்கவாசகர்தம் புகழ் இன்றும் வாழ் கிறது. அதைத் தகைக்க கிக்னத்த பிற அமைச்சர், அன்றி அரசன் புகழோ அன்றைக்கே அற்று விட்டது. எனவே புகழ் வேண்டாமென்ருலும் வந்தடைவதைத் தடுக்க முடியாது. என்ருலும் இன்றைய உலகில் புகழ் வேண் டாது ஒதுங்கி கின்று செய்யும் பணியைப் பெயர் இல் லாது செய்தல்தான் சிறந்த அறிவுடமையாகும். அவ் வாறு செய்பவர்கள் என்றென்றும் வாழ்பவராவார்கள். அன்றி அப்போதே புகழ்தேட கினேப்பவர்கள் ஒருவேளை அவர்தம் ஆயுட்காலம் வரையில் புகழோடு வாழலாம். ஆனல் உலகமுள்ளளவும் வாழ இயலாதே. இதையே தான் எல்லாச் சமயங்களும் சொல்லுகின்றன. உன் வலது கை செய்வது இடதுகைக்குத் தெரியாதிருக்கட்டும்' என இயேசு இதுகுறித்துச் சொன்னர். உலகில் மனித குகப் பிறந்து விட்டோம்: அதல்ை நமக்குரிய கடமை இது என எண்ணிக் கடமைக்காகச் செயலாற்றுவதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/73&oldid=812563" இலிருந்து மீள்விக்கப்பட்டது