பக்கம்:கொய்த மலர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கொய்த மலர்கள் வைக்க வேண்டிய தேவையை உணர்ந்திருப்பான். ஆம்! அதுதான் நாகரிக வாயிலின் முதற்படி என்று கண்டான். தனித்த மனிதன் சமுதாயமாகச் சேர்ந்து வாழத் தொடங்கிய காலத்தில், அவையல் கிளவி மறைத் தனர் கிளத்தல் என்ற இலக்கணப்படி, அனைவரும் கூடியிருக்கும் இடத்தில் சிலவற்றை மறைத்தல்தான் பண்புடைமையின் அடிப்படையில் அமைந்த நாகரிகம் என்று அவன் உள்ளத்தே உணர்ந்திருப்பான். அந்த உணர்வின் வழியே புறத்துறுப்புக்கள் சிலவற்றையும் பொதிந்து மூடவேண்டிய தேவை ஏற்பட்டது. அந்தத் தேவையே மனிதனே ஆடை வழிப்பற்றி ஈர்த்தது. ஆம்! அந்த ஆடை அணிந்த வரலாறு மனித வரலாற்றிலேயே சிறத்த மைல் கல்லாகும். முதல் முதல் ஆடை அணியக் கற்றுக் கொண்ட மனிதன் இன்று நாம் உடுப்பது போன்ற உயரிய ஆடைகளை அணிந்து கொண்டான் என்று கூற முடியுமா? எப்படி முடியும்? எதையோ கிடைத்ததைக் கொண்டு தன் உடலை மூடிக்கொண்டான் என்பதுதானே பொருத்த மானதாகும். அதற்குப் பலப்பல மரப்பட்டைகளும் விலங்குகளின் தோல்களும் பயன் பெற்றிருக்கும். மர வுரி என்று பழங்காலத்திய இந்த ஆடையைப் பேரிட்டுக் காட்டுவதை இன்றும் காண முடிகிறதன்ருே தோலாடை இன்னும் அடியோடு அற்றுவிடவில்லையே! இப்படி மரத்தாலும் தோலாலும் மானம் காத்த மக்களினம் மெல்ல மெல்லப் பிற ஆடைகளையும் பயன்படுத்தத் தொடங்கியது என்னலாம். இந்திய காட்டு எல்லேக்கு-சிறப்பாகத் தமிழ் காட்டுக்கு எல்லைக்கு-சில நூற்ருண்டுகளுக்கு முன் வந்த மேல; நாட்டவர் ஒருவர் இங்கே ஆடை காய்க்கும் மரங் கள் இருந்தன என்று எழுதிச் சென்ருர் எனக் கேள்விப் படுகிருேம். அவர் வியந்து கூறியது பருத்தி ஆடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/8&oldid=812575" இலிருந்து மீள்விக்கப்பட்டது