உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

விடும் என்று பேசுவானா? அல்லது திராவிட நாடு, கிடைக்காது என்றாவது பேசுவானா?

"தாசிகள் பற்றிய கதைகள், நீங்கள் நிரம்பப் படித்திருக்கலாம்—தாசி—ஒருவனிடத்தில், பணம் இருக்கும் வரையில்தான், என்னைத் தழுவிக் கொண்டே இருங்கள்; நீங்கள் இல்லா விட்டால் நான் ஏது? நான் இல்லா விட்டால் நீங்கள் ஏது? என்று ஈருடலும் ஓருயிரும் என்பது போலப் பேசுவாள். ஆனால் அவனிடம் இருந்த பணம் பூராவும் பறி போன பிறகு, அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு என்ற நிலைக்கு வரும் போது, அவனைக் கழுத்தைப் பிடித்து, நெட்டித் தள்ளிவிடுவார்கள். அதைப் போலவே தான் ஏகாதிபத்தியங்களும்...

"நம் செல்வம் முழுவதும் சுரண்டப் படுகையில்—தாசி போல—நாமெல்லாம் பாரத புத்திரர்கள் அல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே!—என்பர், நாம் ஒட்டாண்டிகளான பின், நீங்கள் ஏன் வடநாட்டுடன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்? என்று பேசுவர்—தாசி போல, எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் வடநாட்டு ஏகாதிபத்திய அணைப்பினின்றும் விலகிக் கொள்ள வேண்டும் என்று தி. மு. கழகம், கூறுகிறது."

'அண்ணா நீயும் வேண்டுமென்றே, அவர்கள் குறை சொல்வது போலவே, பெண்கள் விஷயமாகத்தானே எழுதுகிறாய்? ஏனண்ணா; பால் உணர்ச்சி? இதைத்தானே, விலகியோர் கூடக்கண்டிக்கிறார்கள். வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிச் சக்கையாக்கிக் கீழே துப்பிவிடும் என்று

கொ—7