உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

டினர், காங்கிரஸ் தலைவர்கள். அவருடைய அறிவுரை கேட்டாகிலும், திராவிடமாயையிலிருந்து விடுபடுங்கள் என்று கூறினர். அவர் நடத்திய மாநாடுகளில், காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். காமராஜரே, சென்னையில் ஒரு மாநாட்டில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார், இதெல்லாம், ம. பொ. சி.க்கு அவர்கள் காட்டிய மதிப்பு; ம. பொ. சி. அவர்களின் பேரறிவை அவர்கள் போற்றுவதற்கான சான்று, என்ற கொள்வர்; ஏவிவிட, தக்க சமயம்! பயன்படுத்திக்கொள்வோம் என்பதன்றி வேறென்ன!

சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் பக்தவத்சலம் தூக்கி எறிந்தாரே, இதே. ம. பொ. சி. அவர்களை. 'நாங்கள் ஒன்றும் இவருடைய கிளர்ச்சி கண்டு நடுநடுங்கி, தமிழ் நாடு என்று பெயர் மாற்றிடவில்லை; நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்; அவருக்கே அது தெரியும்; அதன்படியே நாங்கள் நடந்துகொண்டோம்', என்று—மதிப்பளிக்க மறுத்தாரே! நானல்லவா, மாநகராட்சி நடாத்திய விழாவென்றில்,; ம. பொ. சி.யைப் பாராட்டி, நன்றி கூறினேன். நண்பருக்கு இப்போது, என் பாராட்டுதல் தேவைப்படாமல் இருக்கக் கூடும்; ஒரே இடத்திலிருந்து பாராட்டுரைகள் கிடைப்பதை விடப் புதுப்புது இடமிருந்து வருவது, சுவையாகத்தான் இருக்கும். அதற்கல்ல, நான் கூறுவது. திராவிட இயக்க எதிர்ப்பு நடத்துவோர் எவராயினும், அவருக்கு ஆதரவு அளித்து, தூக்கிவிட்டு, வேலை வாங்குவது காங்கிரசுக்கு நீண்ட நாள் பழக்கம் என்பதை விளக்கத்தான், அந்தமுறைப்படி இப்போது, 'விலகினோர்க்கு' வீரகண்டாமணி கிடைக்கிறது. வேறென்ன? 'இதைப் பெறுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தை இவர்கள் கண்டித்துத் தீரவேண்டும், வேறென்ன செய்கிறார்கள் தமிழ்நாடுதான் பெறவேண்டும் என்பதற்கா தமது பேச்-