31
இல்லை. அந்தந்த நாட்டு மக்களின் விவேகத்திலும், அவர்களுக்கு அமையும் தலைவர்களின் ஆற்றலிலும், நாணயத்திலும்தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு இருக்கிறது. முன்புபோல் ஒரு நாடு சின்ன நாடாய் இருக்கிறது என்பதற்காக வம்பிழுத்து ஒரு பெரியநாடு போர்தொடுத்து விட முடியாது. மற்ற நாடுகள் வாளா இரா.
"ஆகவே, ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது இராணுவத்தின் அளவையோ, பரப்பளவையோ பொறுத்ததல்ல, திராவிடம் சிறுநாடு. ஆகவே பாதுகாப்பில்லை, என்பது பத்தாம்பசலிகளின் பேதைமைக் கூற்றே தவிரவேறில்லை.
"நாளுக்குநாள் திராவிடநாட்டுப் பிரிவினையின் அவசியத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இச்சமயத்தில் திராவிடத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் திராவிட விடுதலையைக் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் வேறு எத்தகைய உலகமகா மேதாவிகளின் தத்துவங்களை இலட்சியங்களாகக் கொண்டிருந்தாலும், அது மக்களையும் வாழவைக்காது தானும் வாழாது!"
அறியாப் பருவத்தில், ஆர்வத்தின் மிகுதியினால், ஆகுமா ஆகாதா என்பதறியாமல், காலம்போகும் போக்குத் தெரியாமல், லால்குடியில் பேசிவிட்டேன் — நானென்ன மாறுதலின் மேன்மையை அறியாதிருக்க வேண்டுமா, என்று கேட்கப்படுமேல், இதனைக் கூறுவேன். அந்த ஆர்வமும் நம்பிக்கையும், 1959, செப்டம்பர் 12, 13, நாட்களில், பூவிருந்தவல்லியில் நடைபெற்ற, தி. மு. கழக மாநட்டின் போதுகூட அல்லவா, கேட்போருக்கு எழுச்சியூட்டிற்று. 'திராவிடநாடு' எனும் இலட்சியத்தைக் குலைத்து, குறைத்து, பழிதேடிக் கொள்ளாதீர்கள்