63
அவர் மறந்துவிடலாம், மறைக்க முற்படலாம்; மண்ணாங்கட்டி என்று கூறிவிடலாம்; ஆனால் அந்த இலட்சியத்தின் தரம் கெட்டாவிடும்? ஒருபோதும் இல்லை !
நேருவைவிட ஜனநாயகவாதி இல்லை !
இந்தியப் பேரசைவிட சிலாக்கியமான நிர்வாகம் கிடையாது.
ஊழல், ஓடோடி ஒளியும் இந்தியப் பேரரசின் பார்வைபட்டால்.
வடநாட்டு முதலாளிகள், கைகட்டி வாய் பொத்தி வருவாயை வரியாகக் கொடுத்துவிட்டு, வேளா வேளைக்கு வயிறாரச் சோறு போட்டால் போதும், என்று இந்தியப் பேரரசிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றனர்—என்றெல்லாமா, தம்பி! இனிப் பேச முடியும், எடுக்குமா? பேச்சிலே சுவை, எழுச்சி காணக்கிடக்குமா அதுபோலப் பேச முற்பட்டால்? முடியாது! பேசுபவர்கள், குளறவேண்டும்—கேட்போரோ ஐயோ! காது குடைகிறதே என்று அலறவேண்டும்.
தம்பி! எழுச்சிமிக்க பேச்சு என்பது நாவன்மையைப் பொறுத்தது மட்டுமில்லை. நாவன்மை தேவை—ஆனால் பயன்பட, பேசப்படும் பொருள், உள்ளத்தில் ஒளி உண்டாக்கத்தக்கதாக இருக்கவேண்டும்.
"கதிரவன் காய்வான், கலங்காதீர்கள் ! கண்களிலே ஒளி படச் செய்திடும், குழம்பாதீர்கள் ! குத்துங்கள், குடைத்திடுங்கள் ! வெட்டுங்கள் ! ஆழமாக வெட்டுங்கள் ! அலுப்பைப் பாராது வெட்டுங்கள் ! கருவியில் கூர் மங்கினாலும் பரவாயில்லை ! ஆழமாக வெட்டுங்கள்!"
என்று ஒரு பேச்சாளர் வீராவேசமாகப் பேசிடக் கேட்போர், உணர்ச்சி வயப்பட்டு நிற்பர். ஆனால் இறுதியில், "ஆழமாக வெட்டி, அருமையான கத்தரிச் செடி நடவு