66
வேண்டும் ? இதுதான், மக்கள் ஆட்சிக்கு அச்சாணியா ? மாண்புள்ள செயலா ? கூடிப் பணியாற்றுவோரிடம், கொள்கை பற்றிப் பேசிடக் கூச்சம் ஏன் ? தயக்கம் ஏன் ? அவர்களைத் தம் வழி கொண்டு செல்லத் தக்க ஆதாரங்கள், விளக்கங்கள் இருப்பின், ஏன் அந்த முறையைக் கையாண்டிருக்க கூடாது ? ஏகாதிபத்தியவாதி கூட அல்லவா, தான் தர இருக்கும் அரசியல் சீர்திருத்தம் குறித்து, பெறுவோரிடம் கலந்து பேசுகிறான் ? அந்த அளவுக்குக் கூடவா, பொறுப்புணர்ச்சியைப் பூரணமாகக் கொள்ளக் கூடாது ? கொண்டனரோ ? முதலில் விலகல்—பிறகு விளக்கம்—அடுத்தது திட்டம்— அதற்குப் பிறகு கொள்கை !!—இப்படி யாமே இலக்கணம்! அக்கறை கொள்வோர், இதனை எப்படி ஏற்கமுடியும் ! திகைக்கிறேன், தம்பி ! திகைக்கிறேன்.
தம்பி ! திகைக்கிறேன்.
திடீரென, தென்னகம், தெற்கு, திராவிடம் என்ற சொல் கசப்பாகிப் போவானேன் ? பொருளற்ற சொற்கள் இவை என்று புது வியாக்யானம் கூறுவானேன்.......? வடக்கு—தெற்கு என்று வறட்டுக் கூச்சலிடுகிறார்கள், என்று நம்மைக் காங்கிரசார், கேலியாகக் கண்டித்த போது, தோழர் சம்பத் அவர்கள் எப்படி எப்படி ஆத்திரம் பட்டார் ! அரிய பெரிய விளக்கம் தர முற்பட்டார் ! இப்போது அவரேவா அவருடைய வாதங்களைச் 'சொத்தை' என்று பேசுவது ? காலத்தின் கோலமா, கோபத்தின் விளைவா ? அவருடைய பொருள் செறிந்த வார்த்தையைச் சொல்வதானால், கொள்கைக் குழப்பமா ? என்ன காரணம் இதற்கு?
தம்பி ! நீயும் நானும், வடக்கு—தெற்கு என்று பேசுவது தவறு என்று கூறுபவர்களைக் கண்டிக்கக் கூசுவோம்.