71
"இந்தியா மட்டுமல்ல—ஆசியாக் கண்டம் முழுவதுமே ஒன்றாக இருந்தால் நன்றாகத்தானிருக்கும். ஒன்றாக இல்லையே! அதனாலேதான், தென்னக அரசியல் என்ற கண்ணோட்டத்தில் நாம் எதையும் காணவேண்டி உள்ளது."
“நாம் சொல்வதை ஆத்திர—கேரள—கர்நாடகத்தினர் கேட்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் தென்னக அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று வளர்ந்துள்ளதுபோல் ஆந்திர—கேரள—கர்நாடகத்தில் தி. மு. க. வவரவில்லை என்பது மெய்தான். அதைவிட மெய்யானது தென்னக அரசியல் என்று ஒன்றிருக்கிறது என்பது."
"இன்று வடநாட்டுத் தலைவர்கள் எங்கு எப்பொழுது பேசினாலும் அது பாராளுமன்றக் கூட்டமானாலும்—பள்ளித் திறப்பு விழாவானாலும், அங்கெல்லாம் தென்னக அரசியலை பற்றித்தான் பேசுகிறார்கள். 'தெற்கை நாங்கள் புறக்கணிக்கவில்லை' என்று பேசுகிறார்கள்; 'தமிழ் நாட்டைப் புறக்கணிக்கவில்லை' என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள், மேற்கத்தியப் பண்பாடு, கிழக்கத்தியப் பண்பாடு என்று பேசுவதில்லை—மராட்டியப் பண்பாட்டை மேற்கத்திப் பண்பாடு என்றோ, வங்காளத்துப் பண்பாட்டைக் கிழக்கத்திப் பண்பாடு என்றோ சொல்வதில்லை."
"பார்லிமென்டிலே சேத் கோவிந்ததாஸ் என்பவர் பேசும் போதெல்லாம். 'தட்சிண பாரத்' என்று, தான் குறிப்பிடுவாரே தவிர, தமிழ் நாட்டை மட்டும் தனியாகக் குறிப்பிடுவதில்லை."
"தென்னாடு தனித் தன்மையுடன் விளங்கக் காரணம், இந்தியா ஒன்றாக்கப்பட்ட ஒன்றே தவிர, என்றும் ஒன்றாக இருந்ததில்லை. இந்தியா ஒன்றாக்கப்பட்ட வரப்பிரசாதம் வெள்ளையனால் கிடைத்தது. வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் இடையில் எண்ணற்ற எண்ணமோதல்கள்—ஆசா-