உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

சூரியன் தோன்றியதும் ஆந்தையும், கோட்டானும், ஓடிப் பதுங்குவது போல, இன்று நம்மைப் பார்ந்து அலறும் ஆந்தைகளும், கோட்டான்களும் ஓடிப் பதுங்கத்தான் போகின்றன என நம்பித்தான் இந்த அரிய இலட்சியத்திலே எங்கள் கருத்தைச் செலுத்திப் பணியாற்றுவதிலே ஈடுபட்டிருக்கிரறோம்"

இப்படி விளக்கங்கள் !

சின்னாட்களுக்கு முன்பு அமைச்சர் சுப்பிரமணியம் ஒரு அற்புதமான கண்டு பிடிப்பு நடத்தினார். தோழர் சம்பத் அவர்கள் டில்லி பாராளுமன்றம் சென்ற பிறகு பண்டித் நேருவின் பெருமையை அறிந்து கொண்டாராம். இனி எப்படியோ ! இதுவரை, அப்படி நேருவின் பெருமையை அறிந்து கொண்டதாகவோ பாராட்டியதாகவோ, தெரியவில்லை.

"நேருவை நாங்கள் அன்னியராகவே கருதுகிறோம், அன்னிய நாட்டுக்காரராகவே கருதுகிறோம்."

"இந்த நாட்டிலே இருக்கிற கோடிக் கணக்கான மக்கள், நேருவினுடைய ஏகாதிபத்தியத்கை எட்டி உதைத்து விட்டுச் சுதந்திரம் பெறுவதற்கு ஆயத்தமாகி விட்டார்கள்."—பண்டித் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியை விளக்கி, சென்னைக் கடற்கரையில் பேசிய பேச்சிலே ஒரு துளி இது. 21—1—58-ல் பாராளுமன்றப் பிரவேசத்துக்குப் பிறகுதான் !!

"நாம் நியாயத்தின் அடிப்படையில் நின்று 'திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும்' என்று உரிமை முழக்க மிடுகிறோம்; ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள். நமது கோரிக்கை நியாயத்தின் அடிப்படையில் எழுந்தது ; அவர்களின் மறுப்பு மமதையினால் எழுந்தது ; மக்களை மக்களாக மதிக்காது, மாக்களாக நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள்.