உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

"'அகில இந்தியா' என்ற ரீதியில் துவங்கும் எந்த பொருளாதார நிறுவனம் ஆயினும் அதில் வடவர் ஆதிக்கந்தான் நிலவுகிறது."

"பாங்குகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் முதலியவற்றில் எல்லாம் வடநாட்டவரின் முதலீடுதான் ஆதிக்கம் செலுத்துகிறது."

"அண்ணா அவர்கள் 'பணத்தோட்டம்' என்று தொடர் கட்டுரை ஒன்று எழுதினார்கள். அதில், வடநாட்டவரின் பொருளாதார ஆதிக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருக்கிறது—என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்."

"இப்படி, அரசியல், பொருளாதாரத் துறைகளில் வடநாட்டவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு பெற்றிருப்பதனால் தான், 'தெற்கு—குமரி எங்களுக்குச் சொந்தம்' என்கிறார்கள், தங்களின் இன்பம் கருதி—பயன் கருதி !"

"நாம் இந்த வடவரின் ஆதிகத்திற்கு அடிமைப்பட்டு கிடப்பதால் தாழ்வுறுகிறோம்—விழுகிறோம், என்று புள்ளிவிவரங்களை பிரித்துக்காட்டி கேட்கிறோம்—'எங்கள் நாடு எங்களுக்காக வேண்டு' மென !"

"நமது இந்த நியாயமான கோரிக்கையை எந்தக் காரணம் காட்டி, இவர்கள் 'தவறு' என்று கூறுகிறார்கள்?"

"குறி சொல்லுவதுபோல இங்குள்ள சிலர், 'திராவிட நாடாவது கிடைப்பதாவது ? இந்தியாவையாவது—பிரிப்புதாவது ? திராவிட நாடு வெறும் காட்டுக் கூச்சல் ! அது கிடைக்காது ! தரமாட்டோம்' என்று பேசுகிறார்களே தவிர, நாம் காட்டுகிற காரணங்களை மறுத்துப் பேச வாய்திறப்பதைக் காணோம் !"

சென்னைப் பேச்சு ! அறைகூவி அழைத்திருக்கிறர் திராவிட நாடு காட்டுக் கூச்சலென்று பேசுவோரை !