80
மூன்றாம், நான்காம் படிவம் படிக்கும் மாணவர்களைக் கேட்டால் கூட விளக்கம் கிடைக்கும், "திராவிட நாடு" பற்றி என்றும் பேசினார். அது, இது:
நாம் நமது இலட்சியம் கொள்கை, கோரிக்கைகளுக்கான நியாயங்களை வேறு எவராலும் முடியாத அளவிற்கு தொகுத்தெடுத்துச் சொல்லியிருக்கிறோம் ; சொல்லி வருகிறோம், என்றாலும், காமராசர் திராவிட நாடு என்றால் என்ன? என்று எனக்குப் புரியவில்லை என்கிறார். திராவிட நாடு என்றால் என்ன? திராவிட நாடு வேண்டுமா? வேண்டாமா? என்று இந்த மாநிலத்திலுள்ள பள்ளிகளில் மூன்றாம்—நான்காம் படிவங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு கட்டுரைப் போட்டி வைத்தால் அவர்கள் அழகான விளக்கங்களை எழுதிக் காட்டுவார்கள் வேண்டுமானால் காமராசர், அவர்களை அணுகுகிற முறையில் அணுகிப் பார்க்கட்டும்.
"தி. மு. கழகத்தைப் பொறுத்தவரை, திராவிட நாடு ஏன் என்பதற்கான விளக்கம் தரும் வேலையை முடித்துக் கொண்டு, அந்த விளக்கம் பெற்றோரை ஒன்று திரட்டி, திராவிட நாட்டை அடைவதற்கான வேலைகளில் ஈடுபடும் தறுவாயில் இருக்கிறது; இந்த நேரத்தில் போய் காமராசர் நம்மிடம் விளக்கங்கேட்கிறார்; வேடிக்கையாக இருக்கிறது!"
இப்படி எல்லாம் பேசினவரே இன்று திராவிட நாடு கனவு என்று பேசுகிறாரே, ஏனோ இந்தக் கொடுமை செய்கிறார் என்று எண்ணி ஆயாசம் அடையாதே, தம்பி! இவர் இன்று சொல்லுகிறார், வேறு பலர், முன்பு சொன்னபோது அலட்சியப்படுத்திவிட்டு, அடித்துப் பேசிவிட்டு! நாம் அவர்களின் பேச்சுக்கு எந்த மதிப்புத் தந்தோமோ, அதேதான் இதற்கும்.
அகிலம் சுற்றிவந்தவன், கூறுகிறேன், கேள்மின் திராவிட நாடு கனவு! என்றார் பண்டித் நேரு. அகிலம்