89
முன்னேற்றக் கழகத்தின் தலைவரானதால், அவரது கதைகளுக்குக் கிடைக்கிற அமோகமான ஆதரவு, அவரது கட்சிக்கும் ஆதரவையும் வலிவையும் தேடித்தரக் கூடும் என்று சிலர் அஞ்சினர். இப்படிப்பட்டவர்களின் அச்சத்தைத் தவிர்ப்பதற்றாகவோ, என்னவோ தனிக்கைக் குழுவினர் தங்களது கத்தரிக்கோலைப் பதப்படுத்திக் கொண்டனர்." தம்பி ! இப்படி இவர் பார்லிமெண்டில் பேசியது கேட்டு. நான், சரி, கலைத் தொடர்பு, அவசியம்தானா இல்லையா என்ற சந்தேகம் தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினரே, அது பாராட்டுதலுக்குரியது என்றார்—நாம் ஈடுபட்டால் தவறு இல்லை என்றுதானே எண்ணிக் கொள்வேன்;
எப்போது முதல் இவருக்கு, இப்படி ஒரு யோசனை கூறி, என்னை நல்வழிப் படுத்தும் அக்கறை ஏற்பட்டது என்பதே கூட எனக்குப் புரியவில்லை. இருவரும் சேர்ந்து ஒரு 'படம்' கூட வாங்கி, ஓட்டி நட்டப்பட்டிருக்கிறோம் !
பெரியார், சினிமாக்கட்சி என்று கூறியபோது, இவர் தான், மிகப் பலமாகத் தாக்கினவர். சினிமாவை விடு ! சிலம்பத்தை எடு! என்ற தத்துவ முழக்கத்தைக் கேட்டு, இடி இடியெனச் சிரித்தவர் இவர்.
இவருக்குத் திடீரென்று நான் கலைத் தொடர்பு கொள்ளலாகாது என்று எப்படித் தோன்றிற்று என்பதே புரிய வில்லை. மற்றொன்று, இவ்வளவிலும், ஊடுருவி நிற்கும் ஓர் விஷயத்தைக் கவனித்தாயா தம்பி ! அது ஒரு பயங்கரமான நிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
இவருக்குத் திராவிடநாடுதான் சரியான திட்டம் என்று தோன்றும்; நாம் கேட்டு நடக்க வேண்டும். இவருக்குத் திராவிடநாடு கனவு என்று தோன்றும்; தமிழ்நாடு போதும் என்று தோன்றும்; உடனே நாம் அனைவரும் தலை அசைத்தபடி அவர் காட்டும் வழி நடக்க வேண்டும்.