உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

நேர்மையில் நாட்டம் கொண்ட எவர்தான் இணங்கமுடியும்?

அப்போது அப்படிச் சொன்னேன், அதைக் கேட்டு என் பின்னால் வந்தாயல்லவா? இப்போது வேறு ஒன்று, முற்றிலும் மாறானது சொல்கிறேன். பின்பற்ற வேண்டியது தானே! யோசனை என்ன? கேள்வி என்ன?—என்றா பேசுவது?

முன்பு சொன்ன சொல்லை மறந்தவர்களைச் சும்மாவா விட்டு வைத்தார், இவர்? திருச்சி மாநில மாநாடு நினைவிற்கு வருகிறதா? பண்டித நேரு, இவர் நாவில் சிக்கிப் பட்டபாடு, தெரியுமல்லவா? எதற்கு? முன்பு அப்படிப் பேசினாயே, இப்போது இப்படிப் பேசுகிறாயே, ஏன் இந்த முரண்பாடு! நீயும் ஒரு தலைவனா!—என்று கேட்டாரே!

1945-ம் வருட நேருவே! 1956-ம் வருட நேருவுக்குப் புத்தி புகட்ட வாராயோ?—என்று பேசினார். கொள்கைக் குழப்பவாதிகளுக்குத் தெளிவுரை தந்தார்.

"இன்று நம்மை மிகக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருக்கிறவர்—நமது கொள்கைகளுக்கு நேர் எதிரிடையாகப் பயமுறுத்தல்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறவர் யார் என்று சொன்னால், பிரதமர் நேரு ஆவார். அவர் பதவிக்கு வந்தபின்—அந்தப் பதவி நிலைத்தபின், 'தன் ஆயுட்காலம் வரைதானே இந்த நாட்டு அரசியல் ஆதிபதியத்தில் அமர முடியும்; தனக்கு அடுத்தாற்போல் திரும்பிப் பார்த்தால் எறும்புக் கூட்டங்களும் கரையான் கூட்டங்களும் தான் இருக்கின்றன; வாழ்கின்ற வரையில் நம்மை விட்டால் அவர்களுக்கு வேறு கதியில்லை; —என்ற கருத்து அவர் உள்ளத்திலே ஊற ஊற, அவருடைய வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் பயங்கரமாகவும், 1945-ல் இருந்த நேருவுடைய வார்த்தைகளுக்கு நேர் முரணானவையாகவும், 1945-ல் இந்திய அரசியலில் வீர நடை போட்டுக் கொண்டு