34
கோகோ ஆட்டம்
ஆ) சரியான முறையில் கோ கொடுத்துவிட்டு, ஓடிப்போனவர் உட்கார்ந்திருந்த கட்டத்தில் உட்காருகின்ற ஆட்டக்காரர், குறுக்குக் கோட்டைக் கடந்துள்ள தரையை மிதித்து விட்டால் கூட, அது தவறென்று கருதப்பட மாட்டாது.
14. ஓடி விரட்டுபவர், தனது முகத்தை எந்தப் பக்கம் திருப்புகிறாரோ, அந்தப் பக்கத்தையே, தான் போகும் திசையாகக் கொள்ள வேண்டும்.
ஓடி விரட்டுபவர் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு நேர்க்கோண அளவிற்கு மேல் (Right Angle) தனது தோளைத் திருப்பிவிட்டால், அது தவறென்று கருதப்படும்.
15. ஓடி விரட்டுபவர் ஒருவர், மேலே குறிப்பிட்டிருக்கும் விதிமுறைகளுக்கேற்ப, எதனை முதலில் செய்கிறாரோ, அந்தத் திசையை நோக்கியே ஓட வேண்டும்.
16. ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்குப் போவதற்காகப் புறப்பட்ட ஒரு ஓடி விரட்டுபவர் உட்கார்ந்திருக்கும் யாராவது ஒருவருக்குக் ‘கோ’ கொடுத்துவிட்டு அமர்ந்தாலன்றி, எதிரே உள்ள நீண்பு சதுரப் பகுதியை நோக்கித்தான் போக வேண்டும். அங்கு சென்று, அந்தக் கம்பக் கோட்டைக் கடந்து விட்டுத்தான் மீண்டும் திரும்பி வரவேண்டும்.
17. ஓடி விரட்டுபவர் நீண்ட சதுரப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து கம்பத்தைச் சுற்றி அடுத்த பக்கத்திற்குப் போகலாமே ஒழிய, நடுக்கோட்டைக் தாண்டி மறுபக்கம் போகக் கூடாது.