இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதைகள்
தலைவி :
தேங்குழலைக் கேட்கின்ற பருவ மன்று:
தேவைகொண்ட இன்பமதோ அத்தா னன்றித்
தாங்குதங்தைக் கேலாத தன்மை சாற்றித்
தாழ்திகைப்பை நகைப்பாக்கத் திரும்பிப் போடி !
தோழி :
உனப்பிரிந்து துணையறியா எனப்பி ரிந்தே
உளம்வாடச் செய்தனையே கானென் செய்வேன் :
தலைவி :
எனைப்போல நீயு மொரு துணையை நாடி
எழில்குவிக்கும் இன்பத்தை எய்தப் போடி !
தோழி :
நனையாமல் கரியதனை நீராட் டல்போல்
நயமான மாற்றமெலாம் நவின்றாய், நன்றே:
'புணைநீயே வாழ்க்கைதனக் கென்றுன் மாமன்
புரிந்துவரும் செயலதனைப் புகன்றால் சோர்வாய்.
'என்னருமைக் கன்னிதனை இட்டுச் சென்ற
எத்தனைநான் சாடிடுவேன்' என்றே கூறித்
13