இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
வீட்டுணர்வும் நாட்டுணர்வும்
உடலுணர்வும் உறவுணர்வும் ஒன்றாய்க் கூடி மாட்டிடினும் வகுப்பறையில்
மாணவர்தம் முகம்பார்த்தால் மறையக் கண்டேம்; பாட்டதனைப் பொருளதனைப்
பதமாக வழங்கிடுங்காற் பட்டி மாடாய்த் தேட்டையிடும் மாணவனும்
தேன்வண்டாய் மாறாமல் திகைத்தல் காணேம்.
223
முத்தெடுத்துச் சாறெடுத்து
முறுவலுடன் கொடுக்கின்ற முறைபோல், நல்ல
பொத்தகத்தில் உலகியலில் -
பொதிந்துள்ள பூட்டகத்தைப் புதிரை, பூத்த
கொத்தெனவே எழுத்துருவில் .
கொடுக்கின்ற பணிசீரைக் கொடுத்தல் கண்டேம்; அத்தகவுப் பணிநிலைத்த
அரும்பணியாய் என்றென்றும் அழிதல் காணேம்.
224
|28