பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

குழிபறித்த கைகளினால்

கும்பிடுவார் கூப்புகின்ற குவிவி ரல்கள் விழிபறிக்கத் திட்டுதற்கும்

விரைந்தெழுமாம் எனுங்குறிப்பும் விளங்கக்

- கண்டேம்; பழியிறக்கும் கும்பிடையும்

பரிவாக ஏற்பதுமோர் பண்பு தோன்ற வழிபிறக்கும்; பண்புமொரு -

வகைப் பணியாம் எனக்கொண்டே வழுவாய்க்

கானேம், 229

தமிழ்வளர்ச்சி, இனவளர்ச்சி,

தமர்வளர்ச்சிப் பணிசெயினும் தமது வாழ்வின் கமழ்வளர்ச்சிப் பணியின்றேல்

காண்கின்ற வளர்ச்சிகளில் தளர்ச்சி கண்டேம்; சிமிழ்வளர்ச்சித் திரியொன்றால்

சேர்விளக்கு பலவற்றிற் கொளிதந் தாலும்

அமைதிரிக்கே எண்ணெய்தான்

அமையாக்கால் அதன்பணியும் அமைதல் காணேம் . 230

| 3 |