இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
இனப்பகைக்கோர் எதிர்ப்படைதான் கல்விக் கூடம்;
இல்லார்க்குப் பெரும்புதையல் கல்விக் கூடம். சினப்பகைக்குச் சிறைக்கோட்டம் பள்ளிக் கூடம்;
சிறார்க்கெல்லாம் சிறப்பிதழாம் பள்ளிக் கூடம். மனப்பகைக்கு மருத்தகமாம் கல்விக் கூடம்;
மருண்டவர்க்குத் தெருண்டவிடம் கல்விக் கூடம்; குணப்பகைக்குக் குழிநெருப்பாம் பள்ளிக் கூடம்;
கூடமெனிற் குறையற்றோர் கூடும் கூடம்.
246
குருடர்க்கு விளக்கொளியாம் கல்விக் கூடம்;
கூன்செவிடர்க் கின்னிசையாம் கல்விக் கூடம். திருடர்க்குத் திருப்புமையம் பள்ளிக் கூடம்.
திக்கற்றோர் திசைகாட்டி பள்ளிக் கூடம். "பொறியின்மை பழியன்றாம்” எனுங்கு றள்கொள்
பொருளதனின் உருவகமாய்ப் பொலிந்து நிற்கும் உருவார்ந்த மாளிகைதான் கல்விக் கூடம்.
உலகினர்க்குப் பெருங்கோயில் கல்விக் கூடம்.
247
I4]