இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
கல்வியினால் அதன்வேரைக் கெல்ல வேண்டும்;
கருத்தெனும் வாள் கொண்டதன்கால் கடியவேண்டும் , பல்கலையாம் 5.fGaಣ ಖb பாய்ச்ச வேண்டும்;
பகுத்தறிவாம் குறடால்பல் பிடுங்க வேண்டும்; ஒல்வகையாம் கணைகொண்டே ஒடுக்க வேண்டும்;
ஒளிஉளியாற் பெருந்தலையை உடைக்க வேண்டும் செல்வவள நன்கொடையால் செகுக்க வேண்டும்;
செய்தொண்டால் பெருவெற்றி பெறுதல் வேண்டும். 324
பள்ளியெலாம் கோயிலெனப் பரவ வேண்டும்;
படிப்பதிலே பிஞ்சுளத்தைப் பதிக்க வேண்டும்; துள்ளியெழும் காளையரைத் தூண்டி விட்டுத்
துடிப்பாக அறிவியலைத் துய்க்கச் செய்து தெள்ளுதமிழ் இலக்கியத்தைத் தெளிவாய்க் கூறித் திகழ்கின்ற ஆங்கிலத்தில் தேறச் செய்து தள்ளிவைக்க ஒருவரில்லை உலகத் தென்றே
தகவான வெற்றியதைப் பெறச்சூள் கொள்வோம்.
- 325,
(என்.சீர்
ஆசிரிய விருத்தங்கள்)
| 65