பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கல்வியினால் அதன்வேரைக் கெல்ல வேண்டும்;

கருத்தெனும் வாள் கொண்டதன்கால் கடியவேண்டும் , பல்கலையாம் 5.fGaಣ ಖb பாய்ச்ச வேண்டும்;

பகுத்தறிவாம் குறடால்பல் பிடுங்க வேண்டும்; ஒல்வகையாம் கணைகொண்டே ஒடுக்க வேண்டும்;

ஒளிஉளியாற் பெருந்தலையை உடைக்க வேண்டும் செல்வவள நன்கொடையால் செகுக்க வேண்டும்;

செய்தொண்டால் பெருவெற்றி பெறுதல் வேண்டும். 324

பள்ளியெலாம் கோயிலெனப் பரவ வேண்டும்;

படிப்பதிலே பிஞ்சுளத்தைப் பதிக்க வேண்டும்; துள்ளியெழும் காளையரைத் தூண்டி விட்டுத்

துடிப்பாக அறிவியலைத் துய்க்கச் செய்து தெள்ளுதமிழ் இலக்கியத்தைத் தெளிவாய்க் கூறித் திகழ்கின்ற ஆங்கிலத்தில் தேறச் செய்து தள்ளிவைக்க ஒருவரில்லை உலகத் தென்றே

தகவான வெற்றியதைப் பெறச்சூள் கொள்வோம்.

- 325,

(என்.சீர்

ஆசிரிய விருத்தங்கள்)

| 65