இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
தோன்றெழுத்துத் தொடர்பு:சொல்லாம்:
தொடர்சொல்லின் தொகைமொழி"யாம்;
தொடுத்துக்கிளத் தல்"கிளவி
தெரிந்துகொள்c பையா;
தேர்ந்திதனை அறியவேண்டும் மெய்யா.
385
'உண்மை'என்றும், வாய்மை என்றும், மெய்மை என்றும் மூன்றுசொல்லை உரைத்துவைத்த கரணியத்தை உரைக்கவேண்டும் ஐயா,
உண்மையதை யானறிய மெய்யா?
உண்மையதோ எண்ணம், சொல்,
செயல்மூன்றாய் வளருமென்றே
'உள், வாய், மெய் சொற்கள் வைத்தார்,
உணர்ந்துகொள்வாய் பையா,
உண்மையிதில் ஏது குறை: பொய்யா?
386
215.