இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
காற்றெனுங் கூற்றுவன் காலால் உதைத்துத்
துாற்றியே தள்ளித் து'வென் றுமிழ நாற்றிசை எங்கணும் நாயாய்த் திரிகையில்
மாற்றிலா அன்புகொள் மலைகண் டனுகியே,
525 'அன்னாய்’ என்றவள் அருந்தாள் நோக்கினேன்;
'பெண்ணே என்றெனைப் பொறுத்தனள் தலைமேல் தன்னேர் இலாத தாய் மடிக் குழவியாய்த்
துன்னியே படிந்து தூங்கினேன் அயர்ந்தே.
526 வெப்பத் தினாலே வெந்ததென் உடல்எனச்
செப்பியே “கருநோய் செகுத்திட அன்னையும்
ஒப்பியே அழைத்தனள் உயர்தண் தென்றலை; தப்பா தடைந்தெனைத் தழுவியே நின்றதே. உண்மை ஒளியால் பொய்யிருள் அகறல்போல், 527 திண்மை பிறந்ததுந் திகைப்பெலாம் அறுதல்போல் தண்மை அணுகவுந் தீநோய் பறந்திட
வெண்மை பெற்றுடல் வெலவெல’ப் படைந்தே,
528
• • • • • • • • • • • • • • * * * * * * * • • • • • • • • • • • • • rهن - «۰
கருநோய் - கருப்பம்; கருமையாகிய நோய்.
284