இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
அலரும் மலரார் அருமைப் பொழிலாம்
அன்னைத் தமிழின் அழகார் முகமே, மலரும் வேனிற் கானல் வரியால்
மகிழ்ந்து மலர்ந்து நெகிழ்ந்தே அருளும். 57 | தமிழ்ப்பண் பதனைத் தமிழ்ச்சி ரதனைத்
தகுதிக் குரிய தளங்கள் தெரிந்தே கமழப் புரிந்த கவினைப் 'பீடன்'
றெனுஞ்சொல் லீன்றே, வனைந்தான் சான்றே.
572 நிமித்திகக் கயவர் நிகழ்த்திடு மயல்கள்
நிலைகுலைந் தழுங்கக் குலைநடுக் குலுங்கத் துமித்தெறி மறவன்; துறவுகொள் அறவன்; துகளறு புலவன்; திகழ்தமிழ் வலவன். இல்லறச் செல்விக் கொல்காக் காப்பியம் 573
இயற்றிய துறவோ டிசைத்ததற் திறவன் பல்லிசைக் கலையும், பல்லியக் கூத்தும்
பகுத்துத் தொகுத்து முகிழ்த்த அகத்தன். 574
- பீடு அன்று - பெருமைக்கு உரியது அன்று.
298