இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
பாரிதனில் பைந்தமிழ்ச்சீர்
பறிக்கவந்த இந்தியெனும் பகையைத் தள்ளி மூரி நிமிர்ந் தரிமாவாய்
முழங்கிஅதன் முதுகெலும்பை முறிக்கும் பாங்கில் வாரிவிட்ட "இந்திபொது
மொழியா'என் றோர்உரையால் வதைத்த செம்மை விரியத்தால் மறைமலையே, -
ஆண்மையதன் மறையாத மலை நீர் என்பேன்.
600
சைவத்தில் உளந்தோய்ந்தீர்;
'சைவமொடு புராணஞ்சேர் கதைகள் தம்மில் பொய்வைத்தார்' எனக்கழறிப்
பொசுக்கியதும் பேராண்மைப் பொலிவென் என்பேன், தெய்வத்தார் நாங்கள்'எனத்
தீந்தமிழர் மரபெல்லாம் திரித்தார் தீமை கைவைத்தே களைந்தெறிந்த
கவின்மலையே, நும் ஆண்மைக் கருத்தென் என்பேன். 60|
(அறுசீர் ஆசிரிய விருத்தங்கள் - வேறு)
320