இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
7. இனிக்கும் இரவு.
வரிக்காட்டுப் புலிஉறுமும்; கருங்கோட்டான்
வசைபாடும்; அலறும் ஆந்தை, நரிக்கூட்டம் ஊளையிடும்; நச்சரவம்
வெளிக்கிளம்பும் இரவென் றாலும்,
சரிக்கட்டி வாராத கூலிவாங்கச்
சழக்கர்க்குப் பகலில் எல்லாம் தறிக்கட்டை போலுழைத்தார் தலைசாய்க்கும்
இரவென்றால் இனித்தி டாதோ?
. 28
பணம்விரிக்கக் கடைவிரித்துப் பகல்முழுதும்
பொய்விரித்துச் சுரண்டு கின்ற குணம்விரிந்த முதல்விரிந்தார் பாய்விரித்துத் துயில்விரிக்கும் இரவென் றாலும், தணல்விரிந்த தெனஅல்லி இதழ்விரிக்க,
முல்லைதன் முகைவி ரித்து மணம்விரிக்க, முழுநிலாதன் கதிர்விரிக்கும்
இரவென்றால் இனித்தி டாதோ?
2%
20